மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நம் மீது எத்தனை விமர்சனங்கள் ? எத்தனை சோதனைகள் ? மத்தியில் ஆள்பவர்களும் சரி, இங்கே நம்மால் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தபட்ட பழனிச்சாமி கம்பெனியும் சரி,  எத்தனையோ இடைஞ்சல்… எத்தனையோ குடைச்சல்கள்…. கட்சியின் பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை…

புதிதாக கட்சி தொடங்க வேண்டும் என்றால் ? அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலே மார்ச் 15 தொடங்கப்பட்ட கட்சிக்கும் தடை வாங்கினார்கள்.  உங்களுக்கு தெரியும்… அதையெல்லாம் தாண்டி நாம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பரிசு பெட்டி சின்னத்திலேயே சுயேட்சையாக  தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தன்னந்தனியாக போட்டியிட்டோம்.

நாமினேஷனுக்கு கடைசியில் தான் நம்முடைய வேட்பாளர்களுக்கு சின்னமே கிடைத்தது.  ஒரு 15 நாட்களிலேயே அந்த சின்னத்தை நீங்கள் வீடு வீடாக தூக்கிச் சென்றீர்கள். நமது வேட்பாளர்களுக்கு மரியாதையான  வாக்குகளை பெற்று தந்தீர்கள். ஒரு 15 தொகுதிகளிலேயே நாம் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டுகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தி தந்தீர்கள். நமக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் கிடைத்தும்,  நம்மால் சட்டமன்ற பொது தேர்தலிலே வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம்…  பழனிச்சாமி என்கின்ற அந்த தீய சக்தி.

திமுகவை விட மோசமான தீய சக்தி என்று மக்கள் எண்ணிய காரணத்தால் ? நமக்கு வாக்களிப்பதை விட அந்த துரோகியான பழனிசாமியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக…  தீய சக்தி திமுக திருந்திருக்கு  என்பதற்காக…  அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். நம்மால் வெற்றி பெற முடியவில்லை.  ஆனால் இந்த இயக்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக சீரோடும், சிறப்போடும் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.