சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார். இதனால் தேர்வுகளில் ரிஷியின் மதிப்பெண் குறைந்ததால் அடுத்த வருடம் 10-ம் வகுப்பு செல்ல வேண்டும் என கூறி பெற்றோர் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது ரிஷிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

தினந்தோறும் பெற்றோர் படி படி என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக ரிஷி வீட்டின் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மகன் குளியல் அறையின் கதவை திறக்காததால் பெற்றோர் கதவை உடைத்து விட்டு சென்றுள்ளனர். அப்போது ரிஷி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பெற்றோர் படிக்குமாறு கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.