கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஐந்தாவது வட்டத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.