தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூடானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மலர்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் கடந்த 13- ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.