கடலூர் மாவட்டத்தில் உள்ள அனுவம்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திருமாவளவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாகவும், அந்த சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கீரப்பாளையம் ஒன்றிய சமூக நல அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிகாரிகள் திருமாவளவனின் வீட்டிற்கு சென்ற விசாரித்த போது 17 வயது சிறுமியை திருமாவளவன் திருமணம் செய்து கொண்டது உறுதியானது. இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.