கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நிவாஸ் மற்றும் ஐரிஸ் ராபின் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நிவாஸ் மற்றும் ஐரிஸ் ராபினை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.