மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

அப்போது பணியில் இருந்த சிவகுருநாதன் காரை எடுக்க சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் துரை சிவகுருநாதன் மற்றும் போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் துரையை கைது செய்தனர்.