சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ போவதில்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். நேற்று முன்தினம் அம்பத்தூர் சாலையில் மழைநீர் கால்வாய் அருகே பழனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சங்கீதா நேற்று தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.