நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூபா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி, வட்டார அளவிலான ஊராட்சி ஊராட்சி கூட்டமைப்பு குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்  பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற  தலைவர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தி பாலியல் குற்றங்களை தடுப்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும்  குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக ஊராட்சியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.