கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுரை பண்டாரவிளை காலனி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஊர்காவல் படையில் இருக்கும் பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதால் ராஜேஷ் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இருப்பினும் துணிச்சலுடன் பெண் தொடர்ந்து சத்தம் போட்டதால் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.