கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்..

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..