அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அர்த்தபாரி தேயிலைத் தோட்டத்திற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே பைஜான் அலியைப் பிடித்து போலீசார் விசாரிக்கும் போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.  சிறுமியை பைஜான் கடத்தி சென்று தேயிலை தோட்டத்தில் வைத்து கை, கால்களை கட்டி போட்டு இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பைஜான் கைது செய்யப்பட்டதுடன் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். திப்ரூகார் எஸ் பி ஸ்வேதன் மிஷ்ரா 376 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.