தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் கலந்து கொண்டார். இந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒவ்வொரு அரங்கிலும் மடிப் பிச்சை ஏந்தியவாறு புத்தகங்களை வாங்கினார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புத்தகங்களை நடிகர் பார்த்திபன் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்கு கைதிகள் படிப்பதற்காக அனுப்ப இருக்கிறார். மேலும் நடிகர் பார்த்திபனின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.