ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. விறகு எடுக்க சென்றபோது வனவிலங்குகள் தாக்கி மூதாட்டி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.