கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது தீப்பட்டு உடல் முழுவதும் வேகமாக பரவியது.

சிறிது நேரத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.