தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த தஞ்சை சிறப்பு நீதிமன்றம் முருகானந்தத்துக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.