தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கு லேசான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசியதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.