தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.