சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு அர்ஜுனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அர்ஜுனன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

அதன் பிறகு தலைமறைவான அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் அர்ஜுனன் அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று அர்ஜுனனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.