திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை சிவானந்தா காலனி சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள்(62) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு தங்கப்பெருமாள் சுந்தரின் மனைவி பார்வதியை தகாத வார்த்தைகளால் திட்டிக் கல்லால் தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பார்வதி பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.