திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆர்.என்.டி காம்பவுண்ட் பகுதியில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்புவிளையை சேர்ந்த மாலதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வங்கியில் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து மாலதி பலமுறை கேட்டும் வள்ளிநாயகம் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளிநாயகத்தின் வீட்டிற்கு சென்ற மாலதியை அவரும் அவரது மனைவி ஈஸ்வரியும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாலதி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.