தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்தம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.