விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி ஆலையின் ஒரு பகுதியில் ஓய்வு எடுக்க சென்றார்.

அப்போது மர்மமான முறையில் சண்முகையா இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.