சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சுப்பிரமணிய நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீரப்பனூர் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தி மேச்சேரி பேருந்து நிலையம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்தால் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.