கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்குறிச்சி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலையின் மகள் தவமணி தனது தாயை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் அஞ்சலை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனை படுக்கையில் இருந்து எதிர்பாராதவிதமாக அஞ்சலை தவறி கீழே விழுந்ததால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அஞ்சலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.