கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய தங்கம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது எங்கிருந்தோ வந்த பாம்பு மரிய தங்கத்தை கடித்தது.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மரிய தங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரிய தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.