ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள ஆள் இல்லையே என தம்பதியினர் புலம்பி கொண்டிருந்தனர்.

நேற்று காலை 3 மணிக்கு திடீரென ராஜம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தோட்டத்திற்கு எடுத்து சென்று உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கரிய கவுண்டர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.