இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது சமீபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் உணவை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டின் வாசலில் இருக்கும் செருப்பை திருடி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இதற்கு நடிகர் சோனு சூட் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உணவு கொடுத்த பிறகு செருப்புகளை திருடி சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கி கொடுங்கள். அது அவருக்கு உதவியாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும் இப்படி திருடுவதை ஆதரிப்பது தவறு என்று நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.