சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர் நிலை புறம்போக்கு வகையைச் சேர்ந்தது. இந்த இடம் பல கோடி மதிப்புள்ளது.

இதனை சமீப காலமாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை தற்போது வேலி  அமைத்து இருக்கின்றனர். இது குறித்து  அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் அரசு பொது பாதையையும், நீர்நிலை புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.