மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை சீண்டியும்- ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டியும் பேசி முடித்தனர்.

அனைவருக்கும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு வழங்கப்படத்தில் திமுகவுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தும் வகையில் தலைவர்களின் பேச்சு அமைந்தது. அதில் குறிப்பாக கேபி முனுசாமி பேசும்போது ஒரு வார்த்தை கூட திமுகவைப் பற்றியோ, ஆளும் அரசை பற்றியோ பேசவில்லை.

பொதுவாக கேபி முனுசாமி மிகவும் நுட்பமாக அரசியல் பேசுவார். ஆனால் அவர் நேற்றைய மாநாட்டில் ஒரு வார்த்தை கூட பேசாதது அதிமுக தொண்டர்களை வியப்படைய வைத்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தேசிய தலைவராக மாறிவிட்டார். அவர் அம்மாவின் வாரிசு ஆக திகழ்கிறார் என  பேசியதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார். ஓபிஎஸ் பற்றி , ஸ்டாலின் பற்றி, திமுக பற்றி என வரு அரசியல் குறித்தான வார்த்தைகளோ இல்லாமல் பேசியது குறிப்பிடத்தக்கது.