போக்குவரத்து நெரிசல் என்பது உலகளவில் ஒரு கடுமையான பிரச்சனை. ஆனால், துபாயில் போக்குவரத்து ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படும் விதம் குறித்து இந்தியர் ஒருவர் வெளியிட்ட வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் கலவையான விவாதத்தைத் தூண்டியுள்ளது. லவேகேஷ் சோலங்கி என்ற அந்த நபர், துபாயின் பிசினஸ் பே பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ள மாலை நேரத்தில் காணொளியைப் பதிவு செய்துள்ளார்.

அதில், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பும் நேரம் என்றாலும்கூட, அங்கு ஹார்ன் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார். இங்கு வாகன ஓட்டிகள், லேனை விட்டு வெளியேறுவது அல்லது சிக்னல் போடாமல் செல்வது போன்ற கடுமையான தவறு செய்தால் மட்டுமே ஹார்ன் அடிக்கிறார்கள் என்றும், மற்ற நேரங்களில் ஹார்ன் அடிக்க தேவையில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Lovkesh Solanki | Dubai Realtor (@realtorlovkesh)

லவேகேஷ் சோலங்கி தனது காணொளியில், இந்தியாவில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தாலும்கூட மக்கள் தொடர்ந்து ஹார்ன் அடிக்கும் பழக்கம் உள்ளது என்றும், ஆனால் துபாய் ஓட்டுநர்கள் முழு ஒழுக்கத்துடன் விதிகளைப் பின்பற்றுகிறார்கள் என்றும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். “ஹார்ன் இல்லை. அவசரம் இல்லை. துபாயில் வெறும் அமைதியான பயணம் மட்டுமே” என்ற தலைப்புடன் அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் துபாயின் போக்குவரத்து விதிகளைப் பாராட்டியுள்ளனர். “துபாய் சிறந்த நகரம் என்பதற்கு இதுவே காரணம்,” என்றும், “இந்தியர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சென்னையிலும் (2.2) ஐஸ்வாலிலும் (2.1) இதுபோன்ற போக்குவரத்து ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.