சமூக வலைத்தளங்களில் ஒருத் தந்தை-மகள் ஜோடியின் மனதைக் கவரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பள்ளிக்கூடம் முடிந்து தனதுச் சாதாரண சைக்கிளில் மகளை ஏற்றிக் கொண்டுச் செல்லும் தந்தையும், அந்தக் குழந்தையின் உற்சாகமும், பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற உண்மையை உணர்த்துவதாக இணையவாசிகள் உருக்கமாகப் பேசியுள்ளனர்.

அந்த வீடியோவில், தந்தை தனது மகளின் பள்ளிப்பையை சைக்கிளின் முன்னால் மாட்டிவிட்டு, மகளைத் தனதுத் தோளில் அமர வைத்துச் செல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Rana Rajat (@journalistrajatrana)

கார்கள் மற்றும் விலை உயர்ந்த வாகனங்கள் இருக்கும் இந்தச் சௌகரியமான உலகில், இந்தச் சாதாரண சைக்கிள் சவாரிதான் அந்த இருவரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.

குழந்தைக்குத் தந்தையின் அரவணைப்புதான் மிகப்பெரியப் பாதுகாப்பு என்ற உணர்வையும், அலங்காரமில்லாத அன்பின் மதிப்பை இந்த வீடியோ உணர்த்துவதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்துள்ளனர்.