என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து அவர்களது கட்டளையை ஏற்று செயல்படுகிறது திமுக அரசு. எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் 10 வருடகால அதிமுக ஆட்சியின்போது, என்எல்சி நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. எனினும் இந்த 22 மாதகால தி.மு.க ஆட்சியில் என்எல்சியின் மக்கள் விரோத போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக்கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என எடப்பாடி கூறினார்.