கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி அதிமுக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருண்மொழி தேவன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.