விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்து உள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளரான கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி இந்த வாரம் திருமணத்துக்கு பின் அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள், அப்பெண்களின் கணவர்கள் எனும் தலைப்பில் விவாதமானது நடந்தது.

அப்போது பெண்கள் எதற்காக திருமணத்துக்கு பின் அம்மாவின் பேச்சை கேட்டு உங்களது கணவர் அணியும் உடையிலிருந்து இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை முடிவு செய்கிறீர்கள் என விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்த பெண்கள் தங்களது தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என கூறினார்கள். அதன்பின் கோபிநாத் உங்கள் மாமியார் எதாவது கூறினால் மட்டும் ஏன் ஏற்க மறுக்குறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மறுபடியும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் சொல்கிறார்கள் என ஆரம்பித்த பெண்களால் நொந்து போன கோபிநாத், நான் நிகழ்ச்சியிலிருந்து ரிட்டைர் ஆகிறேன் என்று சொல்லிவிட்டு பாதிலேயே விளையாட்டாக வெளியேறினார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.