ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சமக தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. இருப்பினும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலசித்து பிறகு இடைத்தேர்தல் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.