NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே NEXT தேர்வு முறையை கைவிடவேண்டும் என்றும் தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.