வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை சுதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சுதாவை பரிசோதனை செய்து டாக்டர் சுதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.