சென்னையில் ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களிடம் செய்தியாளர்கள், பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி தொடருமா ? என்பது குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்க்கு ஓபிஎஸ்,  நாளை மாலை அதற்கான உரிய பதில் பத்திரிகையாளர்களை அழைத்து அளிப்பதாக தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு செயல்பாடு , இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மறுக்கின்ற செயலாகவே  செயல்படுகிறது என்றும், கொடநாடு குறித்த கேள்விக்கு, நல்லவர்களை பற்றி நாம் பேசுவோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.