காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முறைப்படி தமிழகத்திற்கு உண்டான நீரை கொடுக்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நமக்கே தண்ணீர் இல்லை இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த விடக்கூடாது என்பதனை வலியுறுத்தி கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காவிரி விகாரத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.காவிரி விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல சித்தரித்து வதந்தி பரப்புகின்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் பழைய வீடியோக்கள் போஸ்டர்களை சிலர் பரப்புகின்றனர் எனறும் DGP கூறி உள்ளார்.