கர்நாடகா – தமிழகம் இடையே நீர் பங்கீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த நிலையில் தான்,  தற்போது வதந்திகளை யாரும் பரப்பு கூடாது. அப்படி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடையான  தவறா கருத்துக்கள் பகிரப்பட்டு கசப்பான சம்பவம் நடைபெற்றது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி தொடக்கத்திலேயே வைக்க வேண்டும். கர்நாடகத்திற்கும் –  தமிழகத்திற்கும் நீர் பங்கிட்டு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில்,  பழைய வீடியோக்கள், பழைய காட்சிகளை பதிவிட்டு தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். தமிழக – கர்நாடகா எல்லை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.