தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரஉதல்வர் சு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், ‘அரசு வேலைக்கு இருக்கும் மவுசு எந்த காலத்திலும் குறையாது. அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும்.

அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமெனில், அரசு அலுவலர்களும் நன்றாக செயல்பட வேண்டும். குடிமைப் பணிகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு அக்டோபர் முதல் ஊக்கத் தொகை வழங்கப்படும்’ என்றார்.