செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், மொத்தத்தில் ஒன்னு.  நீட்டை பற்றி பேசுவதற்கோ,  கச்ச தீவை மீட்போம் என்று பேசுவதற்கோ யாருக்கு உரிமை இருக்கிறதோ,  இல்லையோ..  திமுகவுக்கும்,  இந்த ஸ்டாலினுக்கும் அருகதை கிடையாது.

நீட்டைக் கொண்டு வந்தது இந்த திமுக. கச்ச தீவை விட்டுக் கொடுத்தது. இவர்களுடைய தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது… ஆகவே இதை பேசுவதற்கு எந்த அருகதையும் – திமுகவுக்கு இல்லை.

இவர்களுடைய மோசடி நாடகத்தை பார்ப்பதற்கு… மக்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. ஏற்கனவே இவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் ?  தமிழர்களை கொன்று குவித்ததை இந்த தமிழ்நாடு பார்த்து இருக்கிறது.  ஆகவே இதையெல்லாம் சொல்லி இந்த மாநாட்டை திசை திருப்ப முடியாது என தெரிவித்தார்.