செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது கூட்டம் என நீங்க கேக்குறீங்களே…  நாங்க நடத்துவது மாநாடு. அவர் நடத்துவது கிளை செயலாளர் கூட்டம் ( அருகில் இருந்த சி.வி சண்முகம் சொன்னார் ) . தேர்தல் கமிஷன் ஆனது எந்த கட்சிக்கு அங்கீகாரம் செலுத்தி இருக்கிறது. அது உங்க எல்லாருக்கும் தெரியும். அதே போல மத்தியிலே இருக்கின்ற பாஜக தலைமையிலான NDA உடைய  கூட்டணியில் அண்ணா திமுக தொடர்ந்து நீடித்து வருகின்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில்.. எடப்பாடி தலைமையில் தான் தமிழகத்தை பொறுத்தவரையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. தமிழக மக்களுக்கு மட்டுமல்ல,  இந்தியாவிற்கும் உலகத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக நடக்கின்ற மாநாடு.

மத்தவர்கள் ( ஓபிஎஸ் )   ஏதோ கூட்டம் போடுகிறார்கள் என்றால் ? கூட்டம் எல்லாரும் போடுவாங்க. கூட்டம் போடுறவங்க போடட்டும். அது  ஜனநாயகத்தில் அவங்க, அவங்க உரிமை. அதை பற்றி நாங்க குறை சொல்வதற்கு விரும்பவில்லை என தெரிவித்தார்.