தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் சென்ற வருடம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அண்மையில் முதன்மை வேடத்தில் அவர் நடித்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து நயன்தாரா பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் 2 திரைப்படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். மேலும் அதில் நடிக்க 20 கோடி சம்பளமாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்திரைப்பட வாய்ப்பு கைநழுவி போனதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது‎