தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் மக்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது. இதில் பங்கேற்பவர்கள் மக்களிடையே பிரபலமாகவும் சினிமா வாய்ப்பும் கிடைக்கின்றது. தற்போது பெரியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் தான் செந்தில், ராஜலட்சுமி. இவர்கள் கிராமத்து பாடல்கள் மூலம் மக்களை கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததிலிருந்து இருவருக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது வெளிநாட்டில் கச்சேரி நடத்துவது என பிசியாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகிருக்கின்றது. இதற்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது