தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மாரிமுத்து தற்போது பொன்னியின் செல்வன் படம் குறித்து கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இன்னமும் நன்றாக எடுத்து இருக்கலாம். பொதுவாக வரலாற்று நாவல்களை எடுக்கும்போது இப்படி அமைவது சாதாரணம்தான். புத்தகத்தில் இருப்பதை மணிரத்தினம் படமாக இயக்கியதால் படத்தில் சுவாரசியம் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தை உலகம் முழுவதும் கொண்டாடிய நிலையில் இயக்குனர் மாரிமுத்து இப்படி ஒரு கருத்தை சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.