தேசிய காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.பி.எம்  உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியினை மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் பள்ளி தாளாளர் டேவிட் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்துள்ளார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய காசநோய் தினத்தன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என காசநோய் பிரிவு அலுவலர்கள் கூறியுள்ளனர்.