நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் ஆக இது அமையும் என்று கூறினார். மேலும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுவது மிகப்பெரிய கௌரவம் என்றும் கூறினார்.