தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் “ருத்ரன்” படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இத்திரைப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். அதாவது “எனக்கு விஜய்யோட அமைதி ரொம்ப பிடிக்கும், அதிகம் பேச மாட்டார். தனக்கு டிரஸ்ட்டில் சில உதவிகள் தேவைப்படும்போது எப்போ போன் செய்தாலும் உடனே அந்த உதவி செய்வார்.

நான் வளர்க்கும் என்னுடைய குழந்தைகள் விஜய் சார் திரைப்படம் வெளியானபோது படம் பாக்கனும்னு கேட்பார்கள். நான் விஜய் சாருக்கு அழைத்து இதுபற்றி கேட்டேன். அவர் அவர்களுக்காக தனியாக ஷோவே போடலாம் என கூறினார். விஜய் சாருடன் நடிக்கனும்னு எழுதிருந்து அது நடந்தா? முதல்ல சந்தோஷப்படுறது நானா தான் இருப்பேன் என்று ராகவா கூறினார்.